பெண்களின் குளியலறை காட்சிகள்:-ஷவரில் ரகசிய கேமரா வைத்த விடுதி உரிமையாளர்!

இந்திரஜித்,
பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைத்து ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்களை கணினியில் சேகரித்து வைத்திருந்த விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்த ரகசிய கேமிரா பற்றின விவரம் வருமாறு,
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தின் ப்ரக்யராஜ் பகுதியில் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியை ஆஷிஷ் கரே என்பவர் நடத்தி வருகிறார். 45 வயதாகும் ஆஷிஷ் கரேவின் தந்தை ஒய்வு பெற்ற அரசு மருத்துவர் என்றும், ஆஷிஷ் கரேவுக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து மகனுடன் வசித்து வருகிறார் என்றும் குறிப்பிடத்தக்கது.
அவர் நடத்தி வரும் விடுதியில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருகின்றனர்.
அப்படியிருக்க கடந்த வியாழன் அன்று இதே விடுதியில் தங்கியுள்ள பெண் ஒருவர் பாத்ரூமில் குளிக்கும் வீடியோவை விடுதி ஓனர் தனது கம்ப்யூட்டரில் பார்த்து கொண்டிருந்தபோது சக பெண்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விடுதிக்கு சென்று ஆஷிஷ் கரேவின் கணினியை கைப்பற்றி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து கணினியை ஆய்வு செய்தபோது விடுதி பெண்கள் குளிக்கும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். மேலும், பல வீடியோக்களை ஆசிஷ் கரே 9 ஹார்டு டிஸ்குகளில் வைத்திருப்பதையும் கண்டு பிடித்து அவைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விடுதியில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்ததில் ஷவரில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
பின்னர், ரகசிய கேமராக்களை வெளியே எடுத்த போலீசார் விடுதி ஓனர் ஆஷிஷ் கரேவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
ஆஷிஷ் கரே, கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்த கேமராக்களை பொருத்தியுள்ளார். இதுவரை ஆயிரக்க கணக்கான பெண்கள் குளிப்பதை அந்த கேமராக்கள் படம் பிடித்துள்ளன.
விடுதியை நடத்தி வந்த ஆஷிஷ் கரே அழகான பெண்களுக்கு கம்மி வாடகை வாங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது.
மொத்தம் 9 ஹார்டு டிஸ்குகளில் அந்த வீடியோக்களை சேகரித்து வைத்திருக்கும் ஆஷிஷ் கரே அவைகளை பணத்துக்காக விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மேலும், அந்த வீடியோக்களை யாருக்காவது விற்பனை செய்துள்ளாரா? ஏதேனும் வெப் சைட்டில் அவைகள் வெளியிட பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.