ஆன்டி அன்னபூரணி சார்பில் போலிசில் புகார்!

முருகன்
ஆதிபராசக்தியாக அவதரித்து மற்றவர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக சொன்ன ஆன்டி அன்னபூரணி தற்போது போலிசில் புகார் அளித்து தன்னை காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
செங்கல்பட்டு அருகே நேரு நகர் திருப்போரூர் கூட்டு ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி திடீர் அம்மன் அன்னப்பூரணி அருள்வாக்கு சொல்ல இருப்பதாக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதற்கு கடும் எதிர்புகள் கிளம்பியது. 2014 ஆம் ஆண்டு அவர் தனியார் தொலைகாட்சி பெண்ணால் கிழித்து தொங்கவிடப்பட்ட கதையெல்லாம் வெளியாகி டிரெண்ட் ஆனது.
இந்நிலையில் அன்னப்பூரணி அரசு அம்மா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும், இதனால் தனக்கும், தன் பக்தர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, தன்னை ஆன்மிக பணியில் ஈடுபடக் கூடாது என தொடர்ந்து சிலர் மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற மிரட்டல்கள் காரணமாக, தனது ஆன்மிக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, உடனடியாக தனக்கும், தனது பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளாராம்.