திருச்சி திமுக பிரமுகர் கடத்திய கஞ்சா! பறிமுதல்!! கைது!!!

திருச்சி திமுக பிரமுகர் கடத்திய கஞ்சா! பறிமுதல்!! கைது!!!

 பா.விஜயகுமார்,

 திருச்சி மாவட்டம், துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. அந்த புகாரை வார்டு உறுப்பினர் ஒருவர் நகர்மன்ற கூட்டத்தில் சொன்னார். அது மட்டுமின்றி  காவல்துறையினரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.

  அதன் பேரில் போலிசார் பாலக்கரை அருகே தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

 குறிப்பாக துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர கஞ்சா தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

  தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், பாலக்கரை அருகே தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பச்சை பெருமாள்பட்டி வெள்ளாளர் தெருவை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் அருண்குமார் அவ்வழியே காரில் வந்தார்.

 காரை மடக்கி சோதனையிட்ட போது, 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 அப்போது இவர் திமுக இளைஞர் அணியில் பொறுப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், அருண்குமாருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது அதனை சப்ளை செய்தது யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.