கியூ பிரான்ச் பாதுகாப்பு முகாமிலிருந்து தமிழர் இளைஞர்களை விடுவியுங்க:-உண்ணாவிரதம்!

ஜி.கே.சேகரன்,
திருச்சி கியூ பிரான்ச் பாதுகாப்பு முகாமில் அடைத்து வைத்துள்ள இலங்கை தமிழர் இளைஞர்களை விடுவிக்க வலியுறுத்தி வாலாஜா பாலார் அணைக்கட்டு இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அணைக்கட்டு பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 4 இலங்கை தமிழர்களை திருச்சியில் உள்ள கியூ பிரான்ச் போலீசார்
சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டிப்பதோடு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரி முகாமில் வசிக்கும் மக்கள் பதாகையை ஏந்தியபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், இலங்கை தமிழர்கள் முகாமில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்