கோவிலிலேயே கைவரிசை! யாருப்பா அந்த திருடர்ஸ்!

கு.அசோக்,
வாலாஜா அடுத்த வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோவிலில் ஒரு லட்சம் மதிப்பிலான பூஜை பொருட்களை நேற்று இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலான ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
நேற்று இரவு கோவிலில் இருந்த நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவிலில் முன்பக்க கிரில் கேட் மற்றும் உள்கதவுகள் கருவறை கதவுகள் மற்றும் உண்டியல் இரும்பு பெட்டிகளின் பூட்டு உடைக்கப்பட்டு பூட்டுக்கள் தரையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவிலில் திருட வந்த மர்ம நபர்கள் கருவறைக்கு வெளியே இருந்த உண்டியல் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர் அதன்பின்னர் கோவில் கருவறை கதவை உடைக்க முயற்சி செய்து இருக்கின்றனர்.
ஆனால் எதையும் உடைக்க முடியாததால் பூட்டை தரையில் போட்டுவிட்டு வெளியே இருந்த செம்பு,பித்தளை உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் ,சிசிடிவி கேமரா உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.