மீண்டும் கிட்டார் வாசிக்க கையை கொடுத்த டாக்டருக்கு நன்றி

மீண்டும் கிட்டார் வாசிக்க கையை கொடுத்த டாக்டருக்கு நன்றி

G.K.Sekaran,

வேலூரில் புகைப்பழக்கத்தினால் ரத்த நாள பாதிப்பு ஏற்பட்டு ஒரு கை முழுவதுமாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்ட கிட்டார் கலைஞருக்கு - இரத்த நாள அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கையை மீட்டெடுத்து முழு செயல்பாடு நிலைக்கு கொண்டு வந்து வேலூர் அப்போலோ மருத்துவர்கள் சாதனை.

  வேலூர்மாவட்டம்,வேலூர் அப்போலோ மருத்துவமனையில் காவேரிப்பாக்கம் அருகேயுள்ள திருப்பாற்கடலை சேர்ந்த கிட்டார் கலைஞரும் விவசாயியுமான ராஜா தனது இடது கையில் கை முழுவதும் நீள நிறமாக மாறுவதை உணர்ந்து மருத்துவர்களை அனுகினார் மருத்துவர்கள் அவருக்கு சிடி.ஸ்கேன் மற்றும் அஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் ராஜாவுக்கு கை முழுவதுமாக செயலிழக்கும் நிலையில் இருந்தது கையில் எந்த உணர்வுமில்லாமல் போனது உடனடியாக ரத்த நாளவியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜராஜன் அறுவை சிகிச்சை செய்து மூன்றே நாட்களில் ராஜாவின் கையை மீண்டும் முழு செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததுடன் நோயாளி ராஜாவும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்

   இதுகுறித்து அப்போலோ மருத்துவமனையின் ரத்த நாளவியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் இது போன்ற நோய்கள் பெரும்பாலும் புகையிலைப்பழக்கத்தால் ஏற்படுகிறது புகைப்பழக்கம் புகையிலை பழக்கத்தால் ரத்த நாள குழாயில் அடைப்பு ஏற்பட்டு கைகால்கள் செயலிழப்பு கை செயலிழப்பு இருதயம் அடைப்பு திடீர் மரணம் ஆகியவைகள் ஏற்படுகிறது ரத்த குழாய் அடைப்பால் ரத்த கெட்டு அடைப்பால் இதுபோன்ற இறப்புகளும் ஏற்படுகிறது.

இது நல்ல ரத்த குழாய்களிலும அடைப்பு ஏற்படலாம் அல்லது கெட்ட ரத்த குழாய்களிலும் அடைப்பு ஏற்படலாம் இதற்கு வெரிகோஸ் நோய் எனப்படும் கால் வீக்கம் கைகளில் சில்லென்ற உணர்வு கை நிறம் மாறுதல்கள் ஏற்படும் அதனை தடுக்க லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது ஒரே நாளில் நோயாளிகளை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம் உடற்பருமன் உள்ளவர்கள் கர்பினி பெண்கள் ஆகியோர்களுக்கும் இந்த நோய்கள் ஏற்படலாம் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்  மேலும் வாதம் ஏற்பட்டு கைகால்களை இழந்தவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது இதனால் ரத்த கட்டிகள் ஏற்பட்டு இருதயத்திற்கு கெட்ட ரத்தம் சென்று உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது எனவே மக்கள் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் இதே போல் இடது கையில் உணர்வற்ற தன்மை மற்றும் நீளநிறமாக மாறி கிட்டார் கலைஞர் ராஜா எங்களை அனுகினார்கள் அவருக்கு டாப்ளர் பரிசோதனைகள் உள்ளிட்டவைகளை செய்ததில் கழுத்துப்பட்டை ரத்த நாள அடைப்பை கண்டறிந்து அவருக்கு அகற்ற வேண்டிய நிலையில் இருந்த கையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து மூன்று நாட்களில் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டோம் இதற்கு ரூ.4 லட்சம் முதல் 5 லட்சம் வரையில்  அறுவை சிகிச்சைக்கான செலவாகும்.

ஆனால் உயிரையும் காப்பாற்றி அவர்களது உடல் உறுப்புகளையும் மீட்டெடுத்துவிடலாம் மேலும் போதை மற்றும் புகைப்பழக்கத்தை தொடர்ந்து குணமான நோயாளிகள் கடைபிடித்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் ரத்த குழாய் நாளங்களில் அடைப்பிற்கு முக்கிய காரணங்கள் தீய பழக்கங்களான புகை மற்றும் மது உள்ளிட்டவைகள் தான் இதனை யாரும் பயன்படுத்தி நோய்வாய் பட வேண்டாம் இல்லையேல் இருதய செயலிழப்பு சிறுநீரகங்கள் செயலிழப்பு போன்றவைகள் ஏற்படும் என்று கூறினார்