வாக்காளர் சிறப்பு திருத்த பணி மும்முரம்! நேரில் சென்ற இராணிப்பேட்டை ஆட்சியர்கள்!
கு.அசோக்,
வேலூர்மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளுக்கு வீடுவீடாக படிவங்கள் வழங்கும் பணி துவங்கியது
வேலூர்மாவட்டம்,வேலூர்மாவட்டத்தில் வேலூர்,அனைக்கட்டு,குடியாத்தம் கேவிக்குப்பம் ,காட்பாடி ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளது இதில் 1314 வாக்குசாவடிகள் உள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த படிவங்கள் கணக்கெடுப்பு பணிகளுக்கான படிவங்கள் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள தகுதியானவர்களுக்கு வீடாக வீடாக சென்று படிவங்கள் வழங்கபடுகிறது.
இப்பணியில் பி.எல்.ஓக்கள் 1314 பேர் ஈடுபட்டுள்ளனர், இதில் படிவங்கள் வழங்குவது குறித்து கண்காணிப்பாளர்களாக 135 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
13,3330 படிவங்கள் வழங்கப்படுகிறது அதில் வீடுவீடாக வழங்கி வருகின்றனர்
அதே போல் இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி படிவங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வீடு வீடாக சென்று வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நேற்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்க உள்ளனர்.
அதில் வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகிய சிறப்பு தீவிர திருத்தப்பணி பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை மற்றும் அம்மூர் ஆகிய பகுதிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி படிவங்களை மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா வீடு வீடாக சென்று வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் நகராட்சி ஆணையாளர் இளையராணி நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை மற்றும் அரசு அதிகாரிகள் தேர்தல் அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்! எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்! கலெக்டர் ஆய்வு தமிழகத்தில் தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டுள்ளது திமுக கட்சிகளின் எதிர்ப்பை தாண்டி தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி 14 வது வார்டு திரு வி கா ரோடு பகுதியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் படிவம் வீடு வீடாக சென்று வழங்கினர். இதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

admin
