தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அனையை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது!சின்னசாமி பேட்டி!!

ஜி.கே.சேகரன்,
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அனைக்கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் வேலூரில் நடந்த உழவர் தின பேரணி மாநாட்டில் மாநில தலைவர் சின்னசாமி பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உழவர் தின பேரணி மற்றும் மாநாடு மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியானது பழைய பைபாஸ் சாலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணாகலையரங்கம் வந்தடைந்தது, அங்கு மாநாடும் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மதன் பூவேந்தன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத்தலைவர் சின்னசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அனையை கட்ட கர்நாடக அரசு முயல்வதை கண்டித்தும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி, உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததை திரும்ப பெறவும், தென் பென்னை பாலாறு இணைப்புத்திட்டம் கிடப்பில் உள்ளதை உடனடியாக விரைவுப்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு பாகுபாடின்றி சொட்டு நீர் பாசனத்திற்கு உதவிடவும், வனவிலங்குகள் விவசாயிகளின் விளைநிலங்களில் புகாமல் தடுக்க வேண்டும்.
மேலும் விவசாயிகளின் விளை நிலங்களை அரசு கையகபடுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் தனியாருக்கு கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகளின் நிலங்கள் தேசிய விரைவு சாலை பணிக்கு கையபடுத்தப்பட்டவைகளுக்கு இழப்பீடு விரைவாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை மாதம் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.