காதலுக்காக வன்முறை!காமத்துக்காக சிறுமிகள் சீரழிப்பு! போக்ஸோ வழக்கில் 5 ஆண்டுகள் சிறை!

ஜி.கே.சேகரன்,
ஆற்காடு பகுதியில் காதலுக்காக வன்முறை,காமத்துக்காக சிறுமிகள் சீரழிப்பு, போக்ஸோ வழக்கில் 5 ஆண்டு சிறை என்று பரபரப்பான செய்திகளே தற்போது வெளியாகி வருகின்றன.
5 - ஆண்டுகள் சிறை
ஆற்காடு பகுதியில் பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ நீதிமன்ற மூலமாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் அடுத்த காட்பாடி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32) இவர் ஆற்காடு பகுதியில் பள்ளியின் அருகே கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர், அதைத்தொடர்ந்து இந்த வழக்கு வேலூர் மாவட்டம் போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கலைப் பொன்னியிடம் விசாரணைக்கு வந்ததை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய அப்பு என்கின்ற மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபரி அவர்கள் உத்தரவிட்டார்.
சிறுமியை சீரழித்தவர்கள் மீது குண்டர் சட்டம்.
ஆற்காடு அருகே சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த சந்திரன் கொல்லாபாளையம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி ஆகிய இருவரும் ஆற்காடு அருகே வசிக்கும் சிறுமியை பகிரங்கமாக மிரட்டி பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். மேற்படி குற்றவாளிகளை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சாகின் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்கண்ட இரண்டு நபர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி பரிந்துரை பேரில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சிறுமியை பாரபட்சம் பார்க்காமல் பலமுறை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 18 வயது மகள் குடியாத்தத்தில் உள்ள அரசு கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
காதலிக்க வற்புறுத்தி வன்முறை செய்தவர் கைது - குடியாத்தம்.
குடியாத்தம் டவுன் கொசண்ணாமலை தெருவை சேர்ந்தவர் சரவணன் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார் இவரது மகன் சந்துரு வயது 23, வாலிபர் சந்துரு கடந்த சில மாதங்களாக ஒரு மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார் இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அந்த மாணவியை வழிமறித்த சந்துரு காதலிக்க வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த மாணவிக்கும் சந்துருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அப்போது ஆத்திரமடைந்து சந்துரு சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியை காதலிக்க வற்புறுத்தி சரமாரியாக தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவி தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். சக மாணவிகள் மாணவர்கள் முன் தன்னை அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த அந்த மாணவி நேற்று காலையில் கழிவறை சுத்தம் செய்யும் லைசால் மருந்தை குடித்துள்ளார்.
மயங்கி நிலையில் இருந்த அந்த மாணவியை பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவியை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய சம்பவம் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து காதலிக்க மறுத்தமைக்காக தாக்கியதாக வாலிபர் சந்துருவை கைது செய்தனர்.