அம்மன் தாலி சரடு அபேஸ்!

அம்மன் தாலி சரடு அபேஸ்!

  கு.அசோக்,

 முத்துமாரியம்மன் ஆலயத்தில் தங்க நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளை. நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை.

 திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீரான் வட்டம் சின்னசாமி தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனின் கழுத்தில் இருந்த ஞானக்குழாய் தங்கக்காசு உள்ளிட்டவைகள் அடங்கிய தாலிக் கயிற்றில் இருந்த நான்கு சவரன் தங்க நகை மற்றும் உண்டியலில் இருந்த 5000 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

 வழக்கமாக இந்த முத்துமாரியம்மன் ஆலயத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை செய்து வருவது வழக்கம்.

 அப்படியிருக்க வழக்கம்போல பூசாரி சிவகுமார் அம்மனுக்கு இரவு பூஜைகள் செய்துவிட்டு கோயிலின் கதவை மூடிவிட்டு சென்றுள்ளார்.

 இந்நிலையில் அதிகாலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த பூசாரி சிவகுமார் கோயிலுக்கு வெளியே உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

   இந்த தகவலை ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல்துறை உதவி ஆய்வாளர் முனிரத்தினம் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.