கழிவுகளை வெளியில் கொட்டும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை!ஆட்சியர் எச்சரிக்கை!

ஜி.கே.சேகரன்,
கழிவுகளை வெளியில் கொட்டும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் ஒன்றாவது மண்டலத்திற்குட்பட்ட காட்பாடி காந்தி நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் குறித்து தரம் பிரித்து வழங்குவது குறித்தும், மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பெறப்படும் குப்பைகள் குறித்தும், அதனை திடக்கழிவு மேலாண்மை செய்து நுன்னுரம் தயாரிக்கும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
அப்போது மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் ஒன்றாவது மாநகராட்சி மன்டலதலைவர் புஷ்பலதா மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் சர்கார் தோப்பு பகுதியிலும் குப்பை கிடங்கை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் குப்பைகள் தரம் பிரித்தல் குறித்து காந்திநகர் காட்பாடியில் 44 தெருக்களின் குப்பைகள் மூலம் நுன்னுரம் தயாரித்தலில் இணைக்கப்பட்டு வீடுகள் கடைகளில் உள்ள குப்பைகள் சேகரித்து ஈரப்பதம் உள்ள குப்பைகளை உரமாக தயாரிக்கின்றனர்.
மேலும் காய்ந்த குப்பைகள், அட்டை, காகித பைகள் ஆகியவையை மக்கள் வெளியில் போடுகின்றனர். பொதுமக்கள் அல்லது வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் அட்டை பெட்டிகள் காகிதங்களை வீட்டிலேயே வையுங்கள்.
அட்டை பெட்டியை வாரத்திற்கு ஒரு தனியாரிடம் கொடுங்கள், அல்லது சிறுவியாபாரிகளிடம் கொடுங்கள் அட்டை பெட்டிகள் காகித பைகள் குப்பையுடன் சேர்த்து போட வேண்டாம், இதனை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளும் போட வேண்டாம் பால் பைகள் இலைகள் ஆகியவைகளை மாநகராட்சி பணியாளர்களிடம் அளிக்கலாம் நுன்னுரம் விற்பனை ஒவ்வொரு திடக்கழிவு மேலாண் நிலையத்திலும் உள்ள 52 நுன்னுரம் தயாரிக்கும் இடங்களில் 52 மெட் ரிக் டன் உரம் தயாரிக்கபட்டு இதனை வேளாண் மக்களுக்கு வழங்கவும் திட்டம் உள்ளது.
கோழி கழிவுகளை பொருத்தவரையில் உரம் தயாரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்த உள்ளோம். அதற்கான இடம் தேர்வு செய்து இயந்திரம் மூலம் உரமாக மாற்ற உள்ளோம் மருத்துவ கழிவுகள் சேகரிக்க தனி ஏஜென்சிகளிடம் ஆட்கள் மூலம் சேகரித்து வருகிறோம் அதனை வெளியில் கொட்டும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார்.