இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புனித தோமையார் கோலாகலம்!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புனித தோமையார் கோலாகலம்!

 கு.அசோக்,

 இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற புனித தோமையார் திருத்தல திருத்தேர் பவணி -ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் உள்ள புனித தோமையார் திருத்தலத்தில் புனித தோமையார் ஆண்டு பெருவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

 தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்றின் காரணமாக தேர் பவனி நடைபெறாத நிலையில் மாலை சிறப்பான முறையில் தேர்பவனி கோலகலமாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புனித தோமையாரின் தேர்பவனி தேவாலய வளாகத்தில் தொடங்கி  நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

   வழிநெடுக்கிலும் பொதுமக்கள் சாதி மத பேதம் இன்றி புனித தோமையாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். தேர் பவனி நிறைவில் திருத்தலத்தில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது தொடர்ந்து திருவிழா நிறைவு பெற்றதை குறிக்கும் விதமாக திருவிழா தொடங்கிய போது கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கப்பட்டன.