குழந்தைகளுடன் நாங்க எங்க போறது?

குழந்தைகளுடன் நாங்க எங்க போறது?

க.பாலகுரு,

  ரவுண்டானா கட்டுவதால் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம் குழந்தைகளை வைத்து நாங்க எங்க போறது... மாற்று இடம் வேண்டி கண்ணீர் மல்க பொதுமக்கள் கோரிக்கை

  நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் இருந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வழியாக தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

  நன்னிலம் முடிகொண்டான் ஆற்று பாலம் அருகே ரவுண்டானா கட்ட இருப்பதால், நெடுஞ்சாலை துறையினருக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

  இந்த நிலையில் இன்று நன்னிலம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகள் வணிக வளாகங்கள் ஆகியவை அகற்றினார்.

   மேலும் அங்கு 45 ஆண்டு காலமாக குடியிருக்கும் குடும்பத்தினர் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். திடீரென வீட்டை இடித்தால் நாங்கள் எங்கு போவோம். குழந்தைகளை வைத்து எங்கு செல்வது என தெரியவில்லை நடுரோட்டில் நிற்கின்றோம் இதுவரை மாற்றிய இடம் எங்களுக்கு கொடுக்கவில்லை எங்கே போவதுனே தெரியவில்லை எனவே அரசு எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.