இராணுவ பேட்டையில் வாரசந்தை!

இராணுவ பேட்டையில் வாரசந்தை!

கு.அசோக்,

 வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் "லை லுக்" சார்பில் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்கள் பணியாற்றும் கிராமமான கம்மவான்பேட்டையில் நீண்ட ஆண்டு கோரிக்கையான வாரச்சந்தை இப்போது துவங்கியது

 வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகேயுள்ள இராணுப்பேட்டை என்றழைக்கபடும் கம்மவான்பேட்டை இந்திய இராணுவத்தில் அதிக அளவு ராணுவ வீரர்கள் பணியாற்றும் கிராமமாகும். இக்கிராமத்தில் வீட்டில் ஒருவர் இருவர் என இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக தங்களின் கிராமத்தில் வாரச்சந்தை வேண்டுமென தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

 இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று கம்மவான் பேட்டை கிராமத்தில் வெள்ளிக்கிழமை தோறும் வாரசந்தை நடத்துவதாகமறிவிக்கப்பட்டது. முதல் நாள் வாரசந்தையில் காய்கறிகள், மரசாமான்கள், இரும்பு சாமான்கள் உள்ளிட்டவைகள் கூடைகள், முரம், பாய்கள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் இந்த வாரச்சந்தையில் விற்கப்பட்டது இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.