தலைமுடியை கூட வெட்டவில்லை?கடிந்துகொண்ட கலெக்டர்!!

தலைமுடியை கூட வெட்டவில்லை?கடிந்துகொண்ட கலெக்டர்!!

கு.அசோக்,

 பூக்கள் இனிப்புகள் எழுதுகோல் கொடுத்து மாணவிகளுக்கு பெண்கள் பள்ளியில் வரவேற்பு - சீருடை அணியாத மாணவர்களை பள்ளியினுள் ஏன் அனுமதித்தீர்கள் என ஆட்சியர் கண்டிப்பு - பள்ளிகளில் புத்தகங்களும் வழங்கப்பட்டது

 வேலூர்மாவட்டம்,வேலூரில் இன்று 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் ஈவெரா நாகம்மையார் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜாப்பூ, இனிப்புகள் கொடுத்து பன்னீர் தெளித்து எழுதுகோலை வழங்கி மாணவிகளை வரவேற்றனர், மாணவிகளும் உற்சாகத்துடன் அதிக அளவில் பள்ளிக்கு வந்தனர்

   இதே போன்று வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்க வருகை தந்தார்.

  அவருடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அங்கு சீருடைய அணியாமல் வந்த மாணவர்களை அழைத்து சீருடைய அணியாமல் ஏன் வந்தீர்கள் தலைமுடியை கூட வெட்டவில்லை என கடிந்துகொண்டார்.

    அதே போல் ஆசிரியர்களையும் அழைத்து மாணவர்களை ஒழுக்கப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு நீங்கள் அமைதியாக இருப்பதால் தான் மாணவர்கள் இது போன்று ஒழுங்கீனமாக இருப்பதாகவும் ஆசிரியர்கள் மாணவர்களை திருத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார் பள்ளியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததையும் பார்வையிட்டு சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்

  பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மொத்தம 294069 புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளோம்.

 பள்ளியையும் தூய்மைப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம், பொதுப்பணித்துறை பொருத்தவரையில் நிர்வாக காரணங்களுக்கு பள்ளி நிர்வாக குழு சார்பில் அனுமதி பெற்று பணிகளை செய்யலாம் என அனுமதியளித்துள்ளது.

 இதனால் பள்ளியை சீரமைப்பு பள்ளி நிர்வாக குழு நடவடிக்கை எடுக்கும் அனைத்து பள்ளிகளிலும் இதனை செய்ய கூறியுள்ளோம் தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் விரும்பினால் அரசு பள்ளிகளில் வெள்ளை அடிக்கவும் அனுமதிக்கிறோம் என்று கூறினார்.