அமைச்சர் ஆட்சியர் இணைந்து மஞ்சப்பை திட்டத்தில் ஈடுபாடு!

அமைச்சர் ஆட்சியர் இணைந்து மஞ்சப்பை திட்டத்தில் ஈடுபாடு!

   ஜி.கே.சேகரன்,

   தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி தூய்மைப் பணியாளர்களோடு சேர்ந்து குப்பைகளை அகற்றினார்.

 முதல்வர் தொடங்கி வைத்த மஞ்சப்பை திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக அகற்றி குப்பைகள் இல்லாத மாவட்டமாக உருவாக்க முடியும் என்று  மாவட்ட ஆட்சியர் பேச்சு.

  75-வது சுதந்திர தின அமுத பெருவிழா முன்னிட்டு, நகராட்சியில் பணிபுரியும் துய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியை மிராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் அகற்றும் பணியில் அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்  பெண்கள் நகராட்சி ஊழியர்கள் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களை கொண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

   இந்நிலையில் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இருந்து வாலாஜா செல்லும் சாலையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி தூய்மைப் பணியாளர்களோடு சேர்ந்து குப்பைகளை அகற்றினார்.

  அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல் ஈஸ்வரப்பன், நகர மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் ஆகியோர் சேர்ந்து குப்பைகள்  பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

   அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று மாவட்ட முழுவதும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தேர்தலில் வெற்றி பெற்ற நகர மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் ஆகியோர் முன்வந்து சாலையில் இருக்கும் குப்பைகளை முழுவதுமாக அகற்றி வருகின்றனர்.

 மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்ட மஞ்சப்பை திட்டத்தின் மூலம் இன்று முதல் நாள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 மேலும் இந்த மஞ்சப்பை திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக அகற்றி ஒவ்வொரு  வீட்டிற்கும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு குப்பை இல்லாத மாவட்டமாக இராணிப்பேட்டை உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

  மேலும் நகராட்சி துறையால் குழுக்கள் அமைத்து ஏஜெண்ட்கள்  மூலம் கடைகளில் விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நெகிழிகளை  முழுவதுமாக அகற்றி அந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் இந்த குப்பை கழிவுகள் பிளாஸ்டிக் நேற்று சுதந்திர அமுத பெருவிழா கண்காட்சி நிகழ்ச்சியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி மாணவ மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழிக்க முடியும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.