ஷூ கம்பெனியில் செடிகள் நட்ட கலெக்டர்!

ஜி.கே.சேகரன்,
நாம் உயிர் வாழ தேவையான பிராணவாயுவை மரங்கள் நமக்கு அளிப்பதால் மக்கள் அதிக அளவு மரங்களை நட வேண்டும் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வைத்து ஆம்பூரில் திருப்பத்தூர்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி தனியார் காலனி தொழிற்சாலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து புளோரன்ஸ் காலனி தொழிற்சாலையில் தமிழ்நாடு குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார் ¢ மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், ப்ளோரன்ஸ் காலனி தொழிற்சாலையில் நிர்வாக இயக்குனர். அகில் அஹமத் , காலனி தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் தொழிலாளிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்கள் கலந்து கொண்டனர் . இதில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் பயன்பாட்டை குறித்து அறிவுரை வழங்கினர்.இதில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவ்விழாவில் திருப்பத்தூர்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் மூலம் மரங்களை நட்டியுள்ளோம். இதன் முக்கிய நோக்கமே மரங்கள் அதிக அளவில் நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயுவை நமக்கு அளிக்கிறது ஆகவே அனைவரும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டுமென பேசினார்.