23 குழுக்கள் 249 முகாம்கள் பாம்பு பிடிப்பவர்கள் தயார்! குடையுடன் ஆய்வு நடத்திய திருவாரூர் கலெக்டர்!

க.பாலகுரு,
திருவாரூர் பகுதிகளில் கனமழை எச்சரிக்கையையொட்டி முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் குடையுடன் வந்து பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் பூந்தாழங்குடி, திருவாரூர் வட்டம் மாங்குடி பாண்டவயாறு கதவணை ஆகிய பகுதிகளில் கனமழை எச்சரிக்கையையொட்டி முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் இ.ஆ.ப.அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது பற்றின விவரம் வருமாறு,
இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கனமழை எச்சரிக்கையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார். கூத்தாநல்லூர் வட்டம் பூந்தாழங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஈழங்குண்டான் கிராமத்தில் மிகவும் தாழ்வான பகுதியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பூந்தாழங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தயார் நிலையில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து,அடிப்படை வசதிகளை உறுதி செய்தார்.
பின்னர் திருவாரூர் வட்டம் மாங்குடி பாண்டவயாறு கதவணையில் நீரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு கரை பகுதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் மூலமாக வெளியிடப்படும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமுடன் பின்பற்றவேண்டும். மனித உயிர் பாதுகாப்பு ,கால்நடை , உடமைகள் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நோய் தொற்று ஏற்படா வண்ணம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்ககையாக துணை ஆட்சியர் நிலையிலான பத்து குழுக்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக அளவிலும் கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்ககூடிய பகுதிகளாள 209 பகுதிகள் கண்டறியப்பட்டு 249 நிவாரண முகாம்கள் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சமுதாய உணவு மையங்கள் அமைத்திட 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளது.மழைக்காலங்களில் வெளியில் வரும் பாம்புகளை பிடிக்க பாம்பு புடிப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.வெள்ளம் பாதிக்கக்கூடிய 209 பகுதிகளில் அமைந்துள்ள 713 கிராம அங்காடிகளுக்குறிய வெள்ள கால அத்தியாவாசிய பொருட்கள் 9630 மெ.டன் அரிசி அனுப்பப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள உடைப்பு ஏற்பட கூடிய பகுதிகளுக்கு 1,00803 மணல் மூட்டைகளும், 84500 சாக்குகளும் மற்றும் 5000 சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் , ஜேசிபி இயந்திரங்கள் நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளது. மீன்வளத்துறை மூலம் 50 படகுகள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை மூலம் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படாவண்ணம் தடுக்க போதிய தடுப்பு ஊசிகள் மற்றும் பிளிச்சிங் பவுடர் ஆகியவைகளும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24ஙீ7 இயங்ககூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர்.கீர்த்தனா மணி, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் சோமு, திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.