52 டன் குப்பை கிடங்கான குடியாத்தம்!

கு.அசோக்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்து முடிந்த புகழ்மிக்க கங்கை அம்மன் சிரசி திருவிழாவை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்ததால் குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது.
இந்த நிலையில் கெங்கையம்மன் சிரசு புறப்பட்ட முத்தையாளம்மன் கோயில் மார்க்கெட் பகுதியில் இருந்து குடியாத்தம் கவுண்டனிய மகாநதி கரையில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயம் வரை அம்மன் சிரசு வந்த வழிநெடுங்கிலும் நேர்த்திக்கடனாக சுமார் கோடி கணக்கான சூரைத் தேங்காய் உடைக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் சிரசு விழாவை காண வரும் பக்தர்களுக்காக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடத்தில் பொதுமக்கள் அன்னதானங்கள் வழங்கினர்.
மற்றும் நீர் மோர் கூழ் போன்றவைகளும் வழங்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட குப்பைக் கழிவுகளை அகற்ற குடியாத்தம் நகராட்சி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுழற்சி முறையில் குப்பைகளை அகற்றும் பணியில் பணியாளர்களை ஈடுபடுத்தி நகரில் சேர்ந்திருந்த குப்பைகள் அகற்றப்பட்டது.
இதனால் ஒரே நாளில் நகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட குப்பையின் அளவு சுமார் 52 டன் என குடியாத்தம் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.