சீக்கிரமாக முதல்வர் வசதிகளை அளிப்பார்! எம் .எல் .ஏ.பேச்சு!

ஜி.கே.சேகரன்,
பீஞ்சமந்தை மலைகிராமத்திற்கு விரைவில் சாலை அமைக்கபடும் முதல்வர் ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டுவார் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நலத்திட்டம் வழங்கி விழாவில் பேச்சு
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
ஜவ்வாது மலைதொடரில் உள்ள மலைகிராமமான பீஞ்சமந்தை கிராமத்தில் மக்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடைய தமிழக அரசின் தாட்கோ மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் 23 பேருக்கு 50 சதவிகித மாணியத்துடன் ரூ.23 லட்சம் கடனை அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வழங்கினார்.
இந்த நிகழ்வில் தாட்கோ மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறிப்பினர் நந்தகுமார் பேசுகையில் அனைக்கட்டு அதிக மலைவாழ் மக்கள் கொண்ட தொகுதி ஆகும்.
பீஞ்சமந்தை மலைகிராமத்திற்கு ஆறரை கிலோ மீட்டர் தார் சாலை அமைக்க ஜனவரி மாதம் தமிழக முதல்வர் அடிக்கல்லை நாட்டவுள்ளார்.
புதியதாக சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு ரூ.6.68 கோடி மதிப்பில் முத்துகுமரன் மலை பீஞ்சமந்தை மலை வரையில் சாலை அமைக்கவுள்ளோம்.
மேலும் செல்போன் டவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எந்த வசதியும் இல்லாத மூன்று மலை கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவோம் என பேசினார்.