முறைகேடாக நடைபெற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி ஏமாந்த உறுப்பினர்!

முறைகேடாக நடைபெற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி ஏமாந்த உறுப்பினர்!

ஜி.கே.சேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் 3ஆவது முறையாக திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் உள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நகரமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 அப்போது ஆலோசனை கூட்டத்திலிருந்த 18 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் சுபாஷ் இதற்கு முன்பு விடப்பட்ட தெருவிளக்கு குடிநீர் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் முறைகேடாக நடந்துள்ளது. தொடர்ந்து கேவிஎம் நிறுவனத்தை சார்ந்தவர்களுக்கு   மட்டும் ஒப்பந்தம் விடப்படுகிறது என்றும் இதற்கு முன்பு ஒப்பந்தம் நடைபெறும் பொழுது  ராணா, ஏசி சுரேஷ் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்ந்த ஒப்பந்ததாரர்களை உள்ளேயே விடாமல் மிரட்டி தடுத்து நிறுத்தியுள்ளனர். 

  அதுமட்டுமன்றி போடப்பட்ட ஒப்பந்தத்தை பிரிக்கும்போது சம்மந்தப்பட்டவர்கள் யாருமே பக்கத்தில் இல்லை எனவே அதற்கான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை முழுமையாக எங்களிடம் காண்பித்துவிட்டு ஒப்பந்தத்தை விடுங்கள் அதுவரை  அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார்.

 இதனைத் தொடர்ந்து நகர மன்ற உறுப்பினர்களின் மெஜாரிட்டி ஒப்பந்தம் ரத்து செய்யப்படக் கூடாது என்கிற கருத்தை உறுதி செய்ததால் நகரமன்ற தலைவர் ஒப்பந்தம் ரத்து செய்வது குறித்து எதுவும் கூறாமல் மன்ற ஆலோசனை கூட்டத்தை முடித்து வைத்தார்.  சுமார் அரை மணி நேரம் பரபரப்பாக இருந்த இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 நகர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.