அதிமுக வாவது மண் சாலை போட்டுக் கொடுத்தது ஆனால் திமுக அரசு? டோலி மூலம் கர்பிணி பெண்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்து நெக்னாமலை மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.¢ இந்த மலை கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி இல்லாமல் உள்ளன.
ஆகவே அம்மக்கள் அடிப்படை வசதிக்காகவும் மருத்துவத் தேவைக்காகவும் அன்றாடம் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதி மக்களின் நிலையை அறிந்து கடந்த அதிமுக ஆட்சியின் போது மண் சாலை அமைக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது.
அப்படியிருக்க அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜகிளி அவரது மனைவி ராஜேஸ்வரி இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு அதிகாலை திடீரென வயிற்று வலி காரணமாக துடிதுடித்துள்ளார். கிராமத்தை சேர்ந்த மக்கள் கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி ஏழு கிலோமீட்டர் தூரம் டார்ச் லைட் உதவியுடன் தூக்கி வந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து வாணியம்பாடி அருகே உள்ள வள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணி பெண்ணை சேர்த்துள்ளனர்.
அங்கு சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் கிராம மக்கள் தொடர்ந்து சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென கெஞ்சுகின்றனர். இனிவரும் காலங்களிலாவது அரசு கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.