நெல்லுக்கு இடைதரகர்கள் மாமுல் வசூல் செய்வதை தடுக்க பா.ம.க.தீர்மானம்!

நெல்லுக்கு இடைதரகர்கள் மாமுல் வசூல் செய்வதை தடுக்க பா.ம.க.தீர்மானம்!

  கு.அசோக்,

   பீகார் போல தமிழகத்திலும்  சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும், நெல்லுக்கு இடைதரகர்கள் மாமுல் வசூல் செய்வதை தடுக்க என பாமக  வேலூர் கிழக்கு மாவட்ட பொதுகுழுவில் தீர்மானம் போடப்பட்டது.

  வேலூர்மாவட்டம், வேலூர் விருபாட்சிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட பொதுகுழு கூட்டமானது மாவட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இளவழகன் மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம், மாவட்டதுணை செயலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் தாமு, சாரதி, ஜெகன் உள்ளிட்ட பாமகவினர் திரளானோர் கலந்துகொண்டனர்

  இந்த பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தமிழகத்தில் உடனடியாக பீகாரை போல சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

  அந்தந்த சமுதாய மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும்.

  தற்போது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது அதனை போர்க்கால அடிப்படையில் தடுக்க சுகாதாரத்துறையும் மாவட்ட நிர்வாகமும் செயல்ப்ட வேண்டும்.

  மாவட்டத்தில் விவசாய அரசு நெல் கொள் முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு இடைதரகர்கள் மாமுல் வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.

  பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவுப்படுத்தி பணிகள் தரமாக நடக்க கண்கானிப்பு குழு நியமித்து அதனை கண்காணிக்க வேண்டும்.

  பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இப்பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்டன.