கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்!

கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்!

 ஜி.கே.சேகரன், 

   ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு கருப்பு பேட்ச் அணிந்து ஏஐடியூசியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி, ஐ என் டி யு சி, சி ஐ டி யு சி,எச். எம் எஸ் உட்பட மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடத்தினர்.

   விவசாயிகளுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு இதுவரை வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியின் போது கார் ஓட்டிச் சென்று மோதியதில் நான்கு விவசாயிகள் ஒரு நிருபர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டார்கள் இப்ப படுகொலைக்கு காரணமான ஒன்றே உள்துறை

 இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க கோரி வழக்கு தொடர கோரியும் கருப்பு பேட்ச் அணிந்து கருப்புக்கொடி கட்டியும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில்மாநில துணைத்தலைவர் தேவதாஸ், தாலுக்கா ஒருங்கிணைப்பாளர்

அருள் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டுமத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சிறப்புரையாற்றினார்.இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

ஆம்பூர் நகர காவல் துறை ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.