இந்த பத்து விஷயம் தான் பஞ்சாபில் ஆம் ஆத்மியை பதவியில் அமரவைத்தது!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற பிரதான கட்சிகளை கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்றக்கான பெரும்பான்மையை வாரி சுருட்டியிருக்கிறது.
அதற்கு கீழ்கண்ட இந்த பத்து விஷயம் தான் முக்கியகாரணமாக பேசப்படுகிறது.
1)அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் இணைந்த ஒரு தலைமையை ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் முன்னிறுத்தியது.
2)எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், பெரும் குழப்பத்தில் இருந்தது. அதன் தலைவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
3)மற்ற கட்சிகள் ஆம் ஆத்மி கட்சியின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், அந்த கட்சியினர் ஆளுகை, வளர்ச்சி ஆகிய தங்கள் கொள்கைகளிலிருந்து சிறிதும் விலகாமல் களத்தை எதிர்கொண்டனர். அவர்களுடைய இந்த 'நேர்மறையான கொள்கை' அவர்களுக்கு உதவியது.
4)'கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு' ஆகியவற்றை உள்ளடக்கிய 'டெல்லி மாடல்' ஆட்சியைப் பற்றி பேசி, அதை பஞ்சாப் வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தார் கெஜ்ரிவால்
5)பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து கட்சியை ஒன்றிணைக்கத் தவறிவிட்டார்.
6)அமரிந்தர் சிங்கை முதல்வர் பதவியிலிருந்து விலக வைக்க நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் பயன்படுத்தியது. அதன் பிறகு, சித்து முதல்வராக விரும்பினார். அது நடக்காதபோது, முதல்வரான சரண்ஜித் சிங் சன்னியையும் அவரது கொள்கைகளையும் வெளிப்படையாகத் தாக்கினார். இதுவும் காங்கிரஸ் மீதான மக்களின் நம்பிக்கையை குலைத்தது.
7)பஞ்சாப் அரசியலில் முதன்முறையாக, தலித் தலைவரான சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளர் ஆக காங்கிரஸ் தேர்வு செய்தது. இதனால், ஜாட் சீக்குகள் மற்றும் ஜாதி இந்துக்களின் வாக்கு வங்கியை இழந்தது.
8)ஐந்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத அகாலி தளத்தினால் நம்பத்தகுந்த தேர்தல் வழிமுறைகளை முன்வைக்க முடியவில்லை. இதனால் அகாலி தளத்திற்கு செல்ல வேண்டிய தெற்கு பஞ்சாப் வாக்குகள், ஆம் ஆத்மி கட்சிக்குச் சென்றன.
9) விவசாயிகள் போராட்டம் 'உரிமைகள் வேண்டுமெனில் வீதிகளில் போராட்ட வேண்டுமென மக்களுக்கு உணர்த்தியது'. இது சம்பிரதாயமான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்றவற்றிலிருந்து தனித்து களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மீது மக்களின் கவனத்தை திருப்பியது.
10) காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற கட்சிகள் தங்களின் கடந்த கால ஆட்சி என்ற பாவ மூட்டையைச் சுமந்து வருகின்றன. இந்நிலையில் அவர்களது வாக்குறுதிகளை மக்கள் முழுமையாக நம்பவில்லை.
இதையெல்லாம் கூட்டி கழித்துதான் அங்கு "ஆம் ஆத்மி" கட்சி "அமாரா ஆத்மி" யாகி யிருக்கிறது.