அரசாங்க பாலத்தை திறந்து வைத்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருக்கு ஜாமின் மறுப்பு!

B.சீனிவாசன்,
அரசாங்கம் கட்டி வரும் இரயில்வே பாலத்தை அ.தி.மு.க.செயலாளர் அதிரடியாக திறந்து வைத்து பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாநகர அ.தி.மு.க.செயலாளர் ராதாகிருஷ்ணன் என்கிற எஸ்.ஆர்.கே.அப்பு கடந்த 01.07.2022 ஆம் தேதி அதிரடியாக ஒரு வேலை செய்தார்.
அது என்னவெனில் கடந்த சில நாட்களாக பழுது நீக்கப்பட்டு வரும் காட்பாடி மேம்பாலத்தை அப்பு தன்னுடைய பரிவாரங்களுடன் சென்று ரிப்பன் கட்டி பின்னர் அந்த ரிப்பனை அவரே வெட்டி திறந்து வைத்தார். இதனால் திமுகவினர் நொந்து விட்டனர்.
இந்த பாலத்தை மையப்படுத்திதான் காட்பாடியில் பலர் பாலிடிக்ஸ் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்படி அந்த பாலத்தை ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், ஆர்.டி.ஓ.செந்தில் வேலன், என்.எச்.செயற்பொறியாளார் ஜெயக்குமார் மற்றும் வட்டாட்சியர் ஜெகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டனர்.
அதே போன்றதொறு ஆய்வை எம்.பி. கதிர் ஆனந்த் என்பவர் மேற்கொள்வதாக இருந்த நிலையில் அவரை முந்திக்கொண்ட அப்பு பாலத்தை திரந்துவைத்து போக்குவரத்தை அனுமதித்தார்.
இதைகண்ட திமுகவைச் சேர்ந்த வன்னியராஜாவும், அவரது மனைவியும் மண்டலத் தலைவருமான புஷ்பலதாவும் அப்புவிடம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்த போதே பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
போதாக்குறைக்கு அவர்களை வெறுப்பேற்றும் விதமாக தேங்ஸ் அப்பு சார், இந்த பாலத்தை காட்டி பாலிடிக்ஸ் செய்துக்கொண்டிருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் எங்களை சுத்தலில் விட்டுக் கொண்டிருக்காங்க என்று குரல் கொடுத்து சென்றனர்.
இந்த தகவல் உள்ளூர் எம்.பி. க்கு தெரிந்ததும் பின்னர் அவரும் வந்து பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில், வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தனது ஆதரவாளர்களுடன் சென்று அந்த பாலத்தை குறுக்கில் ரிப்பன் கட்டி பாலத்தை திறந்து விடுவதாக அறிவித்தார்.
போகிற போக்கில் காட்பாடி எம்எல்ஏ குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் குறித்தும் விமர்சனம் வைத்து விட்டு சென்றார்.
இதனை அடுத்து காட்பாடி போலீசார் அப்புவையும், ஜீ.ஜனார்த்தன் பகுதி செயலாளர் என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் நிவேதா அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு மற்றும் அவருடன் சிறையில் உள்ள ஜனார்த்தன் ஆகியோருக்கு அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.பாலசந்தர் ஜாமின் கோரி வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில் அதன் மீது விசாரணை நடைபெற்றது.
பின்னர் மாலையில் அப்புவுக்கும் ஜனார்த்தனனுக்கும் ஜாமின் மறுக்கப்பட்டது.