பதற்றத்தில் ஒபிஎஸ்- இபிஎஸ்! பொதுக்குழு நடக்கவுள்ள 11 ஆம் தேதி அதி முக்கிய தீர்ப்பு!

பதற்றத்தில் ஒபிஎஸ்- இபிஎஸ்! பொதுக்குழு நடக்கவுள்ள 11 ஆம் தேதி அதி முக்கிய தீர்ப்பு!

ம.பா.கெஜராஜ்,

 எடப்பாடி அதிமுக வின் பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ.பி.எஸ்.தரப்பு தொடர்ந்த வழக்கின் வாதம் இன்று பரபரப்பாக நடந்து முடிந்தது.  பொதுக்குழு நடக்கவுள்ள 11 ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்த போது கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்படவேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டடார்.

   வழக்கு விசாரணையை 8-ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.  இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

  அப்போது ஓபிஎஸ் மனு விசாரணைக்கே உகந்தது அல்ல என்று இ.பி.எஸ். தரப்பு தங்கள் வாதத்தை முன்வைத்தனர். மேலும்,  கட்சி பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றத்தில் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். முன் அனுமதி இல்லாமல் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல எனவும் வாதத்தை முன்வைத்தது.

  பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக முன்வைத்த வாதம் தவறு, தலைவர்கள் உயிருடன் இல்லாதபோது தான் பதவி காலி என கருதமுடியும் என்று ஒபிஎஸ் தரப்பு வாதம் முன்வைத்தது. கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை.

   சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தாலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்டவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

   இந்நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தது.

    இதே தினத்தில் தான் அதிமுக பொதுகுழு வை கூட்ட இ.பி.எஸ்.தரப்பு பலமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த் உவிட்ட நிலையில் பொதுகுழு அன்று காலை தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால் ஒபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் பதற்றத்தில் உள்ளனர்.!

  ஏற்கனவே வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்க இப்படித்தான் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு என்பதை தமிழகம் அறியும் தானே?