கொடநாடு கொலை:- உண்மை குற்றவாளியை பிடிக்கக் கோரி போஸ்ட்டர்!! மணல் வியாபாரி ஆறுமுகசாமியிடம் விசாரணை!

கொடநாடு கொலை:- உண்மை குற்றவாளியை பிடிக்கக் கோரி போஸ்ட்டர்!! மணல் வியாபாரி ஆறுமுகசாமியிடம் விசாரணை!

 ஜான்.மரியஜோசப்,

  ப.சீனிவாசன்,

  மணல் வியாபாரி ஆறுமுகசாமியிடமும், அவரது மகன் செந்தில்குமாரிடமும் கொடநாடு கொலை,கொள்ளை பற்றீன விசாரணை டடந்தது, இந்நிலையில் இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளியை பிடிக்க கோரி வேலூர் நீதிமன்றத்தின் எதிரில் போஸ்ட்டர் ஒட்டியிருக்கிறார்கள்!!

 இது பற்றின விவரம் வருமாறு,

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது மறு விசாரணை நடைபெற்று வருகிறது.

  தனிப்படை போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், சஜிவன் மற்றும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

   இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் மகனான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படையினர் அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். அப்படியிருக்க நேற்று அவர் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார்.

 அவரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து  இன்று 2-வது நாளாக செந்தில்குமாரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை  போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

  இடையே செந்தில்குமாரின் தந்தையும் மணல் ஒப்பந்ததாரரும், தொழில் அதிபருமான ஆறுமுகசாமிக்கும் சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று காலை ஆறுமுகசாமி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். ஒரே நேரத்தில் தந்தை, மகனிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இது ஒரு புறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரில், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் எதிரில் பி.எம்.நரசிம்மன் எம்.ஏ.,பில், மற்றும்  7ஜி என்கிற பெயரில் பெரிய சைஸ் போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

  அதில்  அம்மா அவர்களின் கொடநாடு இல்லத்தில் கொலை கொள்ளை நடந்த சம்மந்தப்பட்ட குற்றவாளியை விசாரித்து  விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கு...தமிழக அரசே..தமிழக அரசே என்கிற வாசகங்களும், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது.