வேலுமணியை குறிவைத்து சோதனை:-

வேலுமணியை குறிவைத்து சோதனை:-

gaja,

முன்னாள் அமைச்சர் வேலுமணியை குறிவைத்து வரிமானவரித்துறை வட்டமடித்து வருகிறது. அந்த வகையில் இன்று இரண்டாவது நாளாக கோவை வடவள்ளியை சேர்ந்த என்ஜினீயர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களுல் சோதனை நடந்தது.

  சந்திர சேகர் கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். நேற்றுமுன்தினம் சந்திரசேகர் வீடு, அவரது பெற்றோர், சகோதரர், சகோதரிகள் வீடு, அவர் நடத்தி வரும் ஆலயம் அறக்கட்டளை உள்பட 6 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

   இந்த சோதனை நடந்த போது வீட்டில் சந்திரசேகர் இல்லை. அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினரிடம் வருமானம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

 கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளத்தில் என்ஜினீயர் சந்திரசேகருக்கு தொடர்புடைய கே.சி.பி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக கார்த்திக் ஹரிஹரன் இருக்கிறார்.    சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த அதே நேரத்தில் இங்கும் சோதனை நடந்தது. 2-வது நாளாக நேற்றும் கே.சி.பி. நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சந்திரசேகருக்கு சொந்தமான புலியகுளம் பெரியார் நகரில் உள்ள ஆலயம் அறக்கட்டளை மற்றும் மருதமலையில் உள்ள அவரது சகோதரர் செந்தில்பிரபு வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

 சந்திரசேகரின் சகோதரர் வீட்டில் தொடங்கிய சோதனையானது இன்று அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைந்தது. சோதனை முடிந்து சென்ற அதிகாரிகள் செந்தில்பிரபுவின் செல்போன் மற்றும் சில முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாகவும் கூறப்பட்டது. மேலும் சந்திரசேகர் வீட்டில் நடந்த சோதனையின்போது, அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை வருமான வரித்துறை எடுத்து சென்றதாகவும், லேப்-டாப்பில் ஏதாவது முக்கிய தகவல்கள் இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

   இதற்கிடையே இன்று 3-வது நாளாக சந்திரசேகருக்கு சொந்தமான ஆலயம் அறக்கட்டளை மற்றும் அவருக்கு தொடர்புடைய கே.சி.பி நிறுவனங்களில் இன்றும் வருமான வரி சோதனை நடந்தது. 2 இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகங்கள் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றியதுடன், அங்கிருந்தவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.

 ஆக இப்போதைக்கு இந்த பிரச்சனை தீராது.