ஆம்பூர் பேருந்து நிலைய கழிப்பறைகளில் கூடுதல் வசூல்! கேட்டால் உதைப்பேன் என மிரட்டல்!!
பி.ஆர்.எஸ்.,
ஊருக்கு செல்வதற்காக ஆம்பூர் பேருந்து நிலையத்துக்கு மூத்த செய்தியாளர் ஒருவர் குடும்பத்தினருடன் வந்தார்.
அப்போது சிறுநீர் கழிப்பதற்காக நகராட்சி கட்டண கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் சிறுநீர் கழிப்பதற்காக கட்டணமாக ரூபாய் 10 தர வேண்டும் என அங்கு இருந்தோர் கேட்டுள்ளார்கள். பத்து ரூபாய் அதிகமாக உள்ளதே என்று சொன்னதற்கு அவரை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி நாங்க சும்மா இந்த காண்ராக்டை எடுக்கல லஞ்சத்தை கொட்டியிருக்கிறோம்.
ஒன்பது லட்சத்தை கட்டியிருக்கிறோம் என கூறி உள்ளார்கள்.
நீங்க அதிக பணம் கொடுத்து எடுத்தால் நாங்க என்ன செய்ய முடியும் என்று கேட்டதற்கு, அப்படித்தான் வசூலிப்போம் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது, மிறி கேட்டால் உதைப்போம் என்று தெனாவட்டாக கூறினார்.
அதுமட்டுமின்றி பேசிக் கொண்டிருந்தபோது செல்லில் படம் பிடித்தனர்ர். பேருந்து நிலையத்தில் சுற்றி இருந்த அத்தனை பேரும் இதனை பார்த்தனர்.இதுகுறித்து நான் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் ஆம்பூர் நகராட்சி ஆணையாளர்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆணையாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் சிறுநீர் கழிப்பதற்கு ஒரு ரூபாய் கட்டணம், எனவே யாரும் அதிக கட்டணம் தரக்கூடாது என அறிவிப்பினை சுவற்றில் எழுதிட ஆணையிடுகிறேன் என உறுதி அளித்தார்.
ஆனால் இதுவரை அப்படி ஏதும் அவர் எழுதி போடவில்லை.