பெண்ணுக்கு கட்டாய முத்தம் கொடுத்து தப்பிய நபர்!

பெண்ணுக்கு கட்டாய முத்தம் கொடுத்து தப்பிய நபர்!

 உ.சசிகுமார்,

 பணியில் இருந்த பெண்ணுக்கு கட்டாய முத்தம் கொடுத்து தப்பிய நபரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம் சதார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் சுகாதார பணியாளரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 கடந்த 10-ம் தேதி சதார் மருத்துவமனையின் பின்பகுதியில் அந்த பெண் பணியாளர் தனியாக சென்றபோது, திடீரென பின்னால் இருந்து வந்த நபர் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி அதை உறுதிப்படுத்தியது.

 அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், மருத்துவமனையின் காம்பவுண்டு சுவர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதால் குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்துவிடுவதாகவும்,

   முள்வேலி அமைத்து மருத்துவமனைக்கு வரும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.