இரட்டை அர்த்தத்தில் பேசும் தலைமை ஆசிரியர்:- விஸ்வரூபம் எடுக்கும் சத்துணவு முட்டை மேட்டர்!

ஜி.கே.சேகரன்,
அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டையை விற்பனைக்கு எடுத்துச் செல்லும் சத்துணவு ஊழியர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்க
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, தும்பேரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 450-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இந்நிலையில் இப்பள்ளியில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு 200 முதல் 250 மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
அப்படியிருக்க பள்ளி மாணவர்களுக்கு குறைந்த அளவில் உணவு வழங்குவதாகவும், மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முட்டைகளை வெளியில் எடுத்துச் செல்வது வாடிக்கையாகவும் உள்ளது ¬கூறப்பட்டு வந்தது.
இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுகுமார் என்பவரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சத்துணவு அமைப்பாளர் ஸ்ரீவித்யாவிடம், பகுதி மக்கள் கேட்டால், பொய்யான தகவல் கொடுப்பதோடு, தன்னை தலைமையாசிரியர் லோகநாதன் மீது குற்றம் சொல்கிறாராம்.
இந்த சூழலில் தான் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முட்டையை வெளியில் எடுத்துச் சென்ற போது கையும் களவுமாக பிடித்த பின்னர்,சத்துணவு அமைப்பாளரிடம் பொதுமக்கள் என்கிற பெயரில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தலைமை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் அவர்தான் முட்டையை வெளியில் எடுத்து வரச்சொல்லி வீடியோ எடுத்ததாக சத்துணவு அமைப்பாளர் தலைமையாசிரியர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மாணவர்களுக்கு வழங்க கூடிய முட்டை மற்றும் சத்துணவு பொருட்களை தொடர்ந்து வெளியில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாகவும் தற்போது கையும் களவுமாக பிடித்த போது தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு வைப்பதும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முட்டைகளை திருடிச்சென்று விற்பனை செய்து வரும் சத்துணவு அமைப்பாளர் வித்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அமைப்பாளருக்கு பலான டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படும் தலைமையாசிரியர் லோகநாதன் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து சத்துணவு அமைப்பாளர் ஸ்ரீவித்யா தெரிவிக்கையில், தலைமையாசிரியர் லோகநாதன் சார் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை சத்துணவு கூடத்துக்கு வருகிறார். என்ன காயி ஃபிரஷா இருக்குதா? என்று சொல்லி காய்களை வாரி சாப்பிடுவது, தக்காளியை எடுத்து சாப்பிடுகிறார். ஒரு மாதிரி இரட்டை அர்த்தத்தில் பேசுறது, ஆயம்மா இருக்கும் போது எதுவும் பேசறது இல்லை.
என்னை தொட்டு தொட்டு பேசுகிறார். சி.இ.ஓ. உனக்கு எவ்ளோ ஆப்பு அனுப்பிச்சியிருக்கிறாரு. டெய்லி என்னை ரிப்போர்ட் கேட்கறாரு. நான் தான் உன்னை கன்சிடர் பண்ணி உனக்காக எதுவும் அனுப்பாம இருக்கிறேன். நீ என்ன சொல்றே? எதுவா இருந்தாலும் என்னிடம் ஓப்பனா பேசு என்று கையை பிடிக்கறது, ஒரு மாதிரி தொடறது. நான் வார்ன் பண்ணி, வெளியில் சொல்லி பிரச்சனை பண்ணுவதாக சொன்னேன். நீ பிரச்சனையை உண்டு பண்றீயா? என்னையே எதிர்ப்பியா என்று என் ரிஜிஸ்தர் எல்லாம் தோண்டடினார். பில் எவ்ளோ வருது காட்டு, அரிசி பருப்பு கம்மியா போடுற. இந்த நோட்டை சி.இ.ஓ.கேக்கறாரு. அதை ஸ்கேன் பண்ணி அனுப்ப வேண்டும் என மிரட்டினார். நான் பிடிஓவிடம் முறையிடுங்கள் என்றேன்.
அப்புறம் எங்க உறவினர் மூலம் சி.இ.ஓ.விடம் முறையிட்டோம். உடனே சி.இ.ஓ. தலைமையாசிரியருக்கு போன் பண்ணி அவரை எச்சரித்துள்ளார்.
பின்னர் என்னிடம் வந்த தலைமையாசிரியர் என்னை வரவிடாமல் செய்துவிட்டாய் அல்லவா உன்னை என்ன பண்ணுகிறேன் பார் என்று டெய்லி ஊர்காருங்களை வரவழைத்து என்னிடம் கலாட்டா செய்ய வைத்தார். வயசு பசங்க என்னிடம் வந்து தலைமையாசிரியர் நைட்ல வர்ராறா பகலில் வர்ராரா என்றெல்லாம் அசிங்கமாக கேக்குறாங்க. முட்டையை போட்டோ எடுக்கறது, சாப்பாட்டை போட்டோ எடுக்கிறது என ரொம்ப தொல்லை கொடுத்துட்டார் சார்.
ஆகவே நான் சிஇஓவிடம் எழுத்து மூலம் முறையிட்டேன். அதன் பின்னர் தான் தலைமையாசிரியர் இப்படி செய்கிறார் என்கிறார் ஸ்ரீவித்யா.
தலைமையாசிரியர் லோகநாதன் என்னதான் சொல்கிறார் என்று அவரை தொடர்பு கொண்டோம், முட்டை வெளியே எடுத்துச்செல்வதை பிடித்ததினால் அவர் அப்படி சொல்கிறார். பாலியல் ரீதியாக எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. ஆதாரம் இருந்தால் நிரூபிக்கச் சொல்லுங்கள். சிஇஓவிடம் புகார் கொடுத்தது பற்றி கேட்டதற்கு அந்த மாதிரி எதுவும் இல்லையே என்று மறுத்தார்.