புதரில் கஞ்சா விற்பனை!

கு.அசோக்,
சோளிங்கர் அருகே முட்புதரில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த வள்ளுவர் காலணி பகுதியை குமார் என்பவர் அதே பகுதியில் முட்புதரில் கஞ்சா விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முட்புதலில் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த குமார் என்பவர் கைது செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் வழக்குபதிவு செய்யப்பட்டது.