இளம் பெண்ணுக்கு கத்தி குத்து!லவ் மேட்டர்!!

கு.அசோக்,
ஒரு தலை காதல் தகராறில் இளைஞர் கத்தியால் குத்தியதில் இளம் பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் 23- வயது வாலிபரும் அதே பகுதியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரிபடிக்கும் 21 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்க்கு முன் இளம்பெண் வீட்டிற்க்கு தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் அந்த இளம்பெண்னை கண்டித்தாகவும் அதனால் அந்த இளம் பெண் இளைஞரிடம் பேசுவதை நிறுத்தியதாக தெரியவந்தது.
பின்னர் அந்த இளைஞர் இன்று மாலை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஊரின் அருகே உள்ள கண்ணிக் கோவில் அருகே பேச அழைத்துள்ளதாக தெரிகிறது மேலும் அந்த பெண் இளைஞர் அழைத்த இடத்திற்கு சென்று அங்கு இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் அந்த பெண் கோவிலில் இருந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் அந்த பெண்னை பின் தொடர்ந்து வீட்டின் அருகே மடக்கி பிடித்து கழுத்து, வயிறு கை போன்ற பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து அந்த இளைஞர் தப்பி ஓடினார்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளம் பெண்ணை அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் 108 ஆம்புலன்ஸ் முலம் மீட்டு வாலாஜாப் பேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ஆபத்தான நிலைமையில் இருந்த அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர முதலுதவி அளித்த பின்னர் பெண்ணை காப்பாற்றினர்.
இந்த இச்சம்பவம் அறிந்த காவேரிப்பாக்கம் போலிசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து விசாரனை நடத்திய பின்னர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண்னிடம் நடந்த சம்பவத்தை குறித்து தீவிரமாக விசாரனை நடத்தினர்.
இந்த நிலையில் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள அந்த இளைஞரை காவேரிப்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
காவேரிப்பாக்கத்தில் ஒருதலைக் காதலால் இளம் பெண்ணை கோவிலுக்கு வரவைத்து ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய இளைஞரின் செயலால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.