டீச்சர்... இப்படி செய்யலாமா? மாணவனுடன் ஓடியதால் பரபரப்பு!

பெ.விஜயகுமார்,
படிக்க அனுப்பினோமா அல்லது ப....க்க அனுப்பினோமோ? டீச்சரே இப்படி செய்யலாமா? என்று கேட்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனை அந்த பள்ளியின் ஆசிரியை கூட்டிக்கொண்டு பறந்துவிட்டார்.
17 வயதான அந்த மாணவன் கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியுள்ளான்.
பின்னர் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
விளையாட சென்ற மாணவன் மறுபடியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய பெற்றோர் நண்பர்களின் வீடுகளிலும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் மாணவன் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் மாணவன் காணாமல் போன நேரத்தில், அதே பள்ளியில் மாணவனுக்கு வகுப்பு எடுக்கும் 26 வயதுடைய ஆசிரியை ஒருவரும் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், மாணவன் காணாமல் போன அதே நாளில் ஆசிரியையும் காணாமல் போனதை உறுதிபடுத்தினர். ஆனால் ஆசிரியை காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லை.
மாணவனை தள்ளிக்கொண்டு ஓடிய அந்த ஆசிரியை திருச்சி, துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்.
எம்ஏ., பிஎட்., படித்துவிட்டு கடந்த 6 ஆண்டுகளாக பள்ளியில் பணிபுரிந்து வந்தாராம்.
டீச்சர் செய்த செயலை கேள்விபட்ட பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.