மாணவனை கைது செய்த மத்திய உளவு டீம்- ஆம்பூரில் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவனை மத்திய உளவுத்துறை காவல்துறையினர் உதவியுடன் கைது செய்து அழைத்து சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவில் இன்று அதிகாலை டெல்லி மத்திய உளவுத்துறை ஐ.பி போலீசார், வேலூர் ஐ.பி, திருச்சி ஐ.பி, திருப்பத்தூர் கியூ பிரான்ச் போலீசார் அடங்கிய டீம் கல்லூரி மாணவனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 வெளிநாட்டின் செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியை சேர்ந்த அணர் அலி வயது (22) என்பவர் ஆற்காடு அருகே உள்ள அப்துல் அக்கிம் என்கிற தனியார் கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் என்றும், அவன் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் மத்திய உளவுத்துறை போலீசார் அணர் அலியை கைது செய்துஅழைத்து சென்றனர் என்பதும் முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.