டோல்கேட் அருகே வழிப்பறி!

டோல்கேட் அருகே வழிப்பறி!

  கு.அசோக்,

 இரும்பு வியாபாரம் செய்யும் தொழிலதிபரிடம் 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி 5 சவரன் தங்க சங்கிலி மற்றும் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் செல்போன் ஆகியவைகளை திருடிகொண்டு தப்பியோட்டம் காயமடைந்த தொழிலதிபர் மருத்துவமனையில் சிகிச்சை

 வேலூர்மாவட்டம்,வேலூருக்கு தொழில் ரீதியாக ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்த ப்ளூ மெட்லட்ஸ் உரிமையாளரும் இரும்பு வியாபாரம் செய்யும் தொழிலதிபர் சபரி கார் மூலம் வந்து பணிகளை முடிவிடித்துவிட்டு மீண்டும் கார் மூலம் ஆம்பூர் சென்றார்.

  அப்போது பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகேயுள்ள கடையில் காபி குடிப்பதற்காக காரை நிறுத்தியுள்ளார்.

  அப்போது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் சபரியை சரமாரியாக தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கசங்கிலி மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போன் ஆகியவைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

  இதுகுறித்து தொழிலதிபர் சபரி அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மர்ம நபர்கள் தாக்குதலில் காயமடைந்த சபரி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொழிலதிபரை தாக்கிவிட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் செல்போன் ஆகியவைகளின் மதிப்பு சுமார் ரூ.2. 50 லட்சமாகும்