இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட புது மாப்பிள்ளை ராஜ்கிரண்! தமிழக அரசு 10லட்சம் வழங்கியது!!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
புதுக்கோட்டை மீனவர் ஆர்.ராஜ்கிரனின் உடல் ஐந்து நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 23 சனிக்கிழமை அன்று இலங்கை கடற்படையால் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அக்டோபர் 18 ஆம் தேதி ராஜ்கிரண் மற்றும் இரண்டு பேர் பயணித்த படகின் மீது இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதில் ராஜ்கிரண் இறந்ததாகக் கூறப்படுகிறது. மற்ற இரண்டு மீனவர்களும் இன்னும் இலங்கை கடற்படையின் காவலில் உள்ளனர்.
நடந்தது என்ன?
எஸ்.சுகந்தன் (22), ஏ.சேவியர் (32), ராஜ்கிரண் (28) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்குச் சென்றதாகவும், இலங்கை கடற்படைக் கப்பல் அவர்கள் படகில் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு பின்னர் இரண்டு பேர் கடற்படையால் இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் ராஜ்கிரண் காணாமல் போனார். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நெடுந்தீவு தீவுக்கு அருகே நடந்தது.
இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் ஆத்திரம் மூண்டது.
மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் ராஜ்கிரண் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜ்கிரணின் உடல் அவரது இறுதி சடங்கிற்காக தமிழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ராஜ்கிரணின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கோரிக்கைகள் வலுத்ததையடுத்து, இலங்கை கடற்படையினர் சடலத்தை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்திற்கு சனிக்கிழமை பிற்பகல் அனுப்பி வைத்தனர்.
இலங்கைக் காவலில் உள்ள மற்ற இரு மீனவர்களும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அவர்கள் இந்திய விசை படகுகளைத் துரத்துவதில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு கப்பல், "ஆக்கிரமிப்பு நோக்கில் செயல்ப்பட்டனர் என்றும், இவே கடலின் நடுவில் மோதலுக்கு காரணம் என்றும் கூறீயிருக்கிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ .10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ராஜ்கிரண் 40 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொண்டவர் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்ய முயன்றபோது, படகு மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் தமிழக மீனவர்கள் தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு கையாளும் விதம் குறித்து மீனவர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் ஆர்.ராஜ்கிரண் உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அமைச்சர் அவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார்.