மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்:- பேருந்து நிலையமே சாட்சி!

சி.இரவி,
வகுப்பறையிலேயே தாலி கட்டும் நிகழ்வுகள் சிலவற்றை அவ்வபோது அறிந்திருக்கிறோம். ஆனால் பள்ளி சீறுடையில் பேருந்து நிலையத்தில் வைத்து ஒருமாணவன் மாணவிக்கு தாலிகட்டியிருக்கிறான்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் ஸ்டாபில் பள்ளி மாணவர், நண்பர்கள் சிலர் சூழ்ந்திருக்க, மஞ்சள் கயிற்றை மாணவியின் கழுத்தில் கட்டுகிறார். நண்பர்கள் அவர்களின்
மீது பூக்களை தூவி ஆரவாரம் செய்கின்றனர். அம்மாணவியோ வெட்கத்தில் சிரிக்கிறார்.\இதை படமும் பிடித்து கொள்கிறார்கள்.
இதையறிந்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கமுடியாமல் தவிக்க, பெற்றோரோ சும்மா ஃபன் என்கிறார்களாம் கூலாக.
விசாரித்தபோது மாணவி plus 2 படிக்கிறாள் என்றும் தாலி கட்டிய மாணவன் பாலிடெக்னிக் படிக்கிறான் என்று தெரியவந்துள்ளது. இதில மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் இன் போலீசார் கைது செய்தனர்
அது சரி,
Note:
சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான பாலாஜி கணேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.