மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் உதவியாளர் திடீர் பலி! சக அலுவலர்கள் அதிர்ச்சி!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் வேலூர் வேலப்பாடியை சேர்ந்த செல்வி (56).
இவர் இன்று வழக்கம் போல் பணிக்கு வந்து பணியின் போது மயங்கி விழுந்துள்ளார் உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இவர் மாற்றுத்திறனாளி என்பதால் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்டோ மூலம் அலுவலகத்திற்கு வந்து சென்றார்.
செல்வி இறந்ததை அறிந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் அலுவலக மேலாளர் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர் பின்னர் இறந்த செல்வியின் உடலை பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
பணியின் போது பெண் அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.