18 கிலோ கஞ்சா கடத்திய பெண்கள் கைது!

18 கிலோ கஞ்சா கடத்திய பெண்கள் கைது!

 ஜி.கே.சேகரன்,

வேலூர் மாவட்டம், காட்பாடி, கிருஸ்தியான்பேட்டை, செக்போஸ்ட் அருகில் இன்று காலை 11 மணி அளவில் நடந்த சோதனையில் 18 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது.

  தமிழக ஆந்திரா மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீசார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது திருப்பதியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சமுத்திரம் காலனி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலைவாணி அதேபோல் சமுத்திரம் காலனி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனியம்மாள் ஆகிய இருவர்  கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் கலைவாணி மற்றும் முனியம்மாள் கைது செய்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதில் இன்ஸ்பெக்டர் திரு.இளங்கோ தலைமையில் எஸ்.ஐ சங்கர், செல்வபதி மற்றும் தலைமை காவலர் சிவக்குமார் மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் ராணிப்பேட்டை தலைமை காவலர் ரங்கநாதன் மத்திய நுண்ணறிவுப் பிரிவு ராணிப்பேட்டை இவர்கள் தலைமையில் இந்த ஆபரேஷன் நடத்தி முடிக்கப்பட்டது.