சீர் கெட்ட சிறார்கள்!

 ஜெ.திவாகர்.

  வர வர சிறார்களின் ரவுடியிசம் சகித்துக் கொள்ள முடியாத வகையில் உள்ளது.

  அந்த வகையில் தஞ்சை பெரிய கோயில் அருகில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நடைபாதை வியாபாரி ஒருவரை கஞ்சா பிடித்த போதையிலிருந்த சில சிறுவர்கள் சரமாரியாக தாக்கி, அவரது செல்போனையும் அபகரித்து சென்றனர்.

  பட்ட பகலில் நடந்த இந்த சம்பவத்தை பலரும் வேடிக்கை பார்த்தனரே தவிர தட்டிக் கேட்கவோ தடுக்கவோ  முன்வரவில்லை. அந்த தைரியத்தில் ஒரு சிறுவன் தடியால் கடைக்காரரை அடித்து தாக்கினான்.