பேரூராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்! கலெக்டர் அதிரடி!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மாவட்ட அரசு ஊழியர்கள் சரிவர வேலை செய்யாவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பலமுறை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி அரசு ஊழியர்கள் மீது பொதுமக்கள் பல குறைகளை கூறி வந்த நிலையில் இன்று திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நாட்றம்பள்ளி பேரூராட்சியில் பணிபுரியும் வரி தண்டலர் கம்சலா மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காவலர் ஜெயபால் அலுவலக உதவியாளர் அனுமந்தன் ஆகியோர் காலதாமதமாக பணிக்கு வந்ததாலும், அவர்கள் மீது ஏற்கனவே புகார் வந்ததின் காரணமாகவும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.
இதனால் திருப்பத்தூரில் உள்ள அரசு அலுவலக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.