சொகுசு காரில் ஆந்திர செம்மரம்! அரசியல்வாதிக்கு காவல் அலுவலர் சப்போர்ட்!

சொகுசு காரில் ஆந்திர செம்மரம்! அரசியல்வாதிக்கு காவல் அலுவலர் சப்போர்ட்!

  ஜி.கே.சேகரன்,

 ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளுடன் 2கார்கள் பறிமுதல்  - 2பேர் கைது! போலீசார் நடவடிக்கை.

 வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி எம்.வி குப்பத்தில்,    காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

 இதில் கார் ஓட்டுனர் ராகுல் தப்பி ஓடிவிட்டார்.

 பின்னர் காரில் இருந்தவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து மேல்பட்டி அருகே உள்ள பழனி என்பவருக்கு சொந்தமான குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வந்தது தெரியவந்தது.

  மேல்பட்டி போலீசார் எம்வி குப்பம் ரைஸ் மில் தெருவில் உள்ள பழனி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள குடோனை ஆய்வு செய்தபோது அங்கு சுமார் 605 கிலோ மதிப்புள்ள 18செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

  இது சம்பந்தமாக வேலூர் நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு (38), எம்.வி குப்பம் பகுதியை சேர்ந்த பழனி (50) என்பவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய ஓட்டுநர் ராகுல் என்பவரை தேடி வருவதுடன் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  பிடிபட்டவர்கள் அரசியல்வாதிகளின் பெயரைக் கூறியதாகவும், போலிசார் ஜர்க் அடித்ததாக சொல்லப்படுகிறது.

  சம்மந்தப்பட்ட சப்டிவிஷன் காவல் அலுவலராக உள்ளவர் மேற்படி அரசியல்வாதிக்கு சப்போர்ட்டாக போலிசாரை வாட்டி வதக்கியதே அதற்கு காரணமாம்.

  இத்தனைக்கும் அந்த அரசியல்வாதி எதிர்கட்சியாம்.