செத்தா புதைப்பதற்கு கூட மறியல் செய்யனுமா?

செத்தா புதைப்பதற்கு கூட மறியல் செய்யனுமா?

  ஜி.கே.சேகரன்,

    செத்தா புதைப்பதற்கு கூட மறியல் செய்யனுமா? என்று சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம்  இருனாப்பட்டு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், கிராமத்தை  சேர்ந்த பாப்பாத்தி (வயது 75) உடல் நலக்குறைவால் காலமானார்.

    இந்நிலையில் இவரை அடக்கம் செய்வதற்கு சரி வரை சுடுகாட்டிற்கு பாதை இல்லை என கூறி பாதையை சீரமைத்து தராத அரசு அதிகாரிகளை கண்டித்து திருப்பத்தூர் ஆலங்காயம் செல்லும் சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   ஏற்கனவே சாலையை சீரமைத்து தர கோரி பலமுறை அதிகாரியிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 மேலும் தற்பொழுது அருகில் இருக்கக்கூடிய ஏரி நிரம்பி அதனுடைய உபரி நீரானது சுடுகாட்டிற்கு செல்லும் பாதையிலேயே செல்வதால் தண்ணீரில் இடுப்பு அளவில்  சென்று சுடுகாட்டிற்கு அடக்கம் செய்யும் நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

 சாலை மறியல் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரிசிலாப்பட்டு போலீசார் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடிய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.