குட்கா வியாபாரியை தப்ப விட்ட போலிசார்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே மாட்டு தீவன கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 35 மூட்டைகளில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போதை பொருட்கள் அதிக அளவு விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன், பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், காவல் ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, நாகராஜன் ஆகியோர் தலைமையிலான அம்பலுர் போலீஸார் புத்து கோயில் பாம்பாண்டி வட்டம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரவி என்பவருக்கு சொந்தமான மாட்டு தீவன சேமிப்பு கொட்டகையில் 35 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.
அதில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தன, அவற்றை பறிமுதல் செய்ததை கவனித்த ரவி தப்பியோடினார். ரவியின் மகன் தென்னரசு என்பவரை கைது செய்தனர்.
சம்பவம் குறித்து அம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். குட்கா கொள்முதல் செய்த சுமார் 10க்கும் கடை உரிமையாளர்களிடம் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.