போதைப் பழக்கம் உள்ளவர்களிடம் விலகி இருக்கங்கள்:- டிஎஸ்பி அறிவுரை!

ஜி.கே.சேகரன்,
பாணாவரம் அரசு பள்ளியில் காவல்துறையின் சார்பில் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம்,பாணாவரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரக்கோணம் டி.எஸ்.பி.புகழேந்தி கணேஷ் கலந்து கொண்டு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள், அதனால் சமூக சீர்கேடுகள் குறித்து பேசினார்.
அதில் மாணவ பருவத்தில் சிலர் போதை பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையே சீர்ரழித்து கொள்கிறார்கள். போதைப் பழக்கம் உள்ள நண்பர்களின் நட்பு இருந்தால் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
மாணவர்கள் சுய கட்டுப்பாடு கடைபிடைக்க வேண்டும். நல்ல பழக்கங்களை மாணவப் பருவத்தில் கடைபிடித்து வாழ்ந்தால் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமையும்.
மேலும் பெற்றோர்கள் ஆசிரியரின் அறிவுரை கேட்டு நடக்கவேண்டும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது தலைமை ஆசிரியர் பொறுப்பு கோபி காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, உதவி ஆசிரியர் இந்திராணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.