ஓ.பி.எஸ். கூடாரத்தை வெறிச் ஆக்க எடப்பாடி திட்டம்! மூன்று எம் .எல் .ஏக்கள் லபக்!

ஓ.பி.எஸ். கூடாரத்தை வெறிச் ஆக்க எடப்பாடி திட்டம்! மூன்று எம் .எல் .ஏக்கள் லபக்!

 ம.பா.கெஜராஜ்,

 எவ்வளவோ சறுக்கல்களை சந்தித்தாலும் கூட ஓ.பி.எஸ்.-ம் அவர தரப்பும் சற்று அசட்டையாக இருப்பதைப்போலவே தெரிகிறது. இந்நிலையில் தான் அவருடன் உள்ள மூன்று எம் .எல் .ஏக்களை திமுக தூக்கு வதற்கு முன் தம் பக்கம் இழுத்துக்கொள்ள எடப்பாடி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

  2022 ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமான நிலையில் அடுத்தடுத்த அடிகளை ஓபிஎஸ் தரப்புக்கு கொடுத்துவிட வேண்டும் என துடிக்கிறது. அதனடிப்படையிலேயே இந்த திட்டமாம்.

  இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று அறிவிப்பு வந்துள்ள நிலையில் உடனடியாக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி உச்ச பதவியில் விரைவில் அமர வேண்டும் என திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

 அதற்காக அடுத்த வாரமே இது தொடர்பான அறிவிப்பை அதிமுக தலைமைக் கழகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அப்படி தேர்தல் அறிவிப்பு வெளியானால், எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனுதாக்கல் செய்வார், அப்புறம் என்ன அவர்தான் பொதுச்செயலாளர்.

 இது ஒரு பக்கம் இருக்க, ஓபிஎஸ் உடன் பயணிக்கும் அவரது ஆதரவாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய மூவரையும் அள்ளிச்செல்ல திமுக ஸ்கெட்ச் போடுகிறது. ஏமாந்தால் ஓ.பி.எஸை கூட அள்ளிச்செல்ல தயாராம். அதற்கான பணி மின்சாரத்திடம் கொடுக்கப்பட்டிருபதாக பேச்சு .

 இந்த தகவல் எடப்பாடி பழனிசாமியில்ன் காதுகளையும் தொட்டுள்ளது.

  உஷாராகும் அவர் மேற்படி பன்னீர் கோஷ்டியை பன்னீரை தவிர்த்து மற்ற மூவரையும் அதிமுக பக்கம் இழுக்க திட்டமிடுகிறாராம். இது மட்டும் நடந்தால் பன்னீர் கூடாரம் வெறிச் ஆகிவிடும்.

 இது மட்டும் நடந்தால் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் உறுதி.