கத்தரிகாயே இல்லாத ஊரின் பெயருக்கு புவிசார் குறியீடா? விளக்கும் செய்தியாளர்!

த.நெல்சன்,
சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை, முதுகுலத்தூர், ஆர்.எஸ்.மங்கலம்,கடலாடி மற்றும் கமுதி ஆகிய கிராமங்களில் விளையும் குண்டு மிளகாய்க்கும், வேலூர் மாவட்டம் மோட்டூர், ஈச்சங்காடு, இலவம்பாடி ஆகிய கிராமங்களில் பயிரிடப்படும் முள்ளுகத்திரிக்காயுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தது.
இந்நிலையில் முள்ளு கத்திரிகாய் விளையாத இலவம்பாடிக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக பொய்கை கிராம விவசாயிகள் புலம்புகிறார்கள். குறிப்பாக விவசாயி எம்.சேகர் என்பவர் எங்க ஊரில் விளையும் கத்தரிகாய்க்கு இலவம்பாடி கத்தரிக்காய் என்று சொல்வதா என்று குமுறுகிறார். இது தொடர்பாக ஊடகவியாளர் சு.குமார் தெரிவிக்கையில்,
மேற்படி இலவம்பாடி கத்தரிகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்தாலும் கூட அந்த ஊரில் கத்தரிக்காயே கிடையாது என்பது தான் நிஜம்.
வேலூர் மாவட்டம் பொய்கை பஞ்சாயத்தில் மோட்டூர், புத்தூர் பஞ்சாயத்தில் ஈச்சங்காடு, இளவம்பாடி பஞ்சாயத்தில் இலவம்பாடி ஆகிய கிராமங்களில் சுமார் 50 ஏக்கர் அளவில் முள்ளு கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. இதை இலவம்பாடி கத்தரிக்காய் என்று சொல்லுவார்கள். அதே பழக்கத்துக்கு வந்துவிட்டது.
சம்மந்தப்பட்ட ஊரில் முள்ளுகத்தரிகாய் தற்போது பயிரிடவில்லை என்றாலும் கூட, அந்த பிங்க் கலரில் சுவைமிக்கதான முள்ளுகத்தரிகாய்க்கு இலம்பாடி கத்தரிகாய் என்று தான் பெயர். ஆகவே இதுல பாரபட்சம் இருப்பதாக நாங்கள் பார்க்கவில்லை.
இந்த கத்தரிக்காய் செடியானது விதை போட்டு செடியான பின்னர் ஒரு பயிர் 3-4 அறுவடைகளைத் தருகிறது. இதன் உலர் காய்கள் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த முள்ளு கத்தரிக்காயை பல நூற்றாண்டுகளாக பயிரிடுவதால், தென்னிந்தியாவின் சார்பாக அரசு வழக்கறிஞரும் ஐ.பி.ஆர். வழக்கறிஞருமான பி.சஞ்சய் காந்தி ஜிஐ விண்ணப்பத்தை செய்தார்.
வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுட்டு திண்ணலாம், பார்பிக்யூட் செய்யலாம், வறுக்கவும், வேகவைக்கவும் அல்லது ஊறுகாய்களாகவும் செய்யலாம். இது பிரியாணி, சாம்பார், பொரியல் மற்றும் மாலை நேர சிற்றுண்டிகளுடன் விருப்பமான உணவாகும்.
இது அதிக வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டது மற்றும் வேலூர் பகுதியில் உள்ள விவசாய காலநிலை நிலைகளுடன் தனித்துவமாக இணைக்கப்பட்டுள்ளது.
"முன்னாள் முதல்வர் கருணாநிதி, வேலூர் உழவர் சந்தை திட்டத்தை துவக்கிவைக்கும் போது, வேலூர் முள்ளு கத்தரிக்காயை குறிப்பிட்டு, அதன் அரிய குணங்களை விவரித்தார்,"
ஒரு முள்ளு கத்திரிக்காய் 40 கிராம் அளவு இருக்கும். அது அறை வெப்பநிலையில் மூன்று நாட்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறத்தில் சுமார் எட்டு நாட்கள் இருக்கும்.
முள்ளு கத்தரிக்காயில் புரதம் (2%) மற்றும் வைட்டமின் சி உள்ளடக்கம் (10.5மி.கி/100மி.கி.) நிறைந்துள்ளது.
இது மற்ற கத்தரி வகைகளை விட சுவையாகக் கருதப்படுகிறது, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இதற்கு உண்டு.
உண்மையிலேயே இந்த அபூர்வ முள்ளுகத்தரிக்காய் பொய்கை மோட்டூரிலும், ஈச்சங்காடு கிராமத்தையுமே பூர்வீகமாக கொண்டது ஆகும். இன்று இவ்விரண்டு கிராமங்களிலும் சீசனை கடந்தும் முள்ளு கத்தரிக்காய் பளபளத்துக் கொண்டிருக்கிறது. இலம்பாடி என்கிற பெயர் மக்கள் மத்தியில் வழக்கச்சொல் ஆகிவிட்டாதால் அதை பிரித்து பார்க்க இயலாது.
சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பதிவுகளைக் கொண்ட 'அடங்கல்' போன்ற கிராம நிலப் பதிவுகள் உட்பட வரலாற்றுத் தரவுகளை சரிபார்த்த பின்னர் அவர்களுக்கு கவுரவம் அளிக்கப்படுகிறது என்கிறார் செய்தியாளர் சு.குமார்,