முண்டா பனியனுடன் மலையேறிய அமைச்சர் சேகர் பாபு!

க.முகில்,
சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி, இயற்கையே இறைவனாக உள்ள கோவை மாவட்டம், அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய இன்று அமைச்சர் சேகர்பாபு அவர்கள்
(22.05.2022) மலையேறி பார்வையிட்டார்.
அப்போது அவருடன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் திரு.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திரு.கண்ணன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.